நெருங்கி வராததால் தான்
இன்னமும்
அழகாய் தெரிகிறார்கள்
நிலவும், அவளும்...!
இன்னமும்
அழகாய் தெரிகிறார்கள்
நிலவும், அவளும்...!
********************************

நிலவை அடைவேன் என்றெண்ணி
நான் செய்த முயற்சிகளனைத்தும்
என் வீட்டு
மொட்டை மாடியிலேயே
முடிந்துவிட்டன...!
நான் செய்த முயற்சிகளனைத்தும்
என் வீட்டு
மொட்டை மாடியிலேயே
முடிந்துவிட்டன...!
********************************

நீ தந்த முத்தங்களை
எண்ண மறந்ததால்
இப்போது எண்ணிக்கொண்டிருக்கிறேன்
வானில் நட்சத்திரங்களை,
தனிமையில் அமர்ந்து...!
எண்ண மறந்ததால்
இப்போது எண்ணிக்கொண்டிருக்கிறேன்
வானில் நட்சத்திரங்களை,
தனிமையில் அமர்ந்து...!
********************************

பிடிக்க முடியாத நிலவைக் காட்டி
பிடித்துத் தருவேன் எனச்சொல்லி,
குழந்தைக்கு சோறூட்டும்
அன்னையைப் போல,
உன்னைக்காட்டி என் மனதிற்கு
கவிதைகளை ஊட்டுகிறேன் நான்...!
பிடித்துத் தருவேன் எனச்சொல்லி,
குழந்தைக்கு சோறூட்டும்
அன்னையைப் போல,
உன்னைக்காட்டி என் மனதிற்கு
கவிதைகளை ஊட்டுகிறேன் நான்...!
********************************
5 comments:
குறுங்கவிதைகளும் படங்களும் நல்லா இருக்கு...
முதல் இரண்டும் பிடிச்சது...!
I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .
//நிலவை அடைவேன் என்றெண்ணி
நான் செய்த முயற்சிகளனைத்தும்
என் வீட்டு
மொட்டை மாடியிலேயே
முடிந்துவிட்டன...!//
எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது!
வாழ்த்துக்கள்!
உன்னைக்காட்டி என் மனதிற்கு
கவிதைகளை ஊட்டுகிறேன்
naaaanum!
Post a Comment
எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!