Monday, May 31, 2010

காதல்



காற்றில் மிதக்கும் என் காதல்

உன் கண்கள் இன்னும் திறக்காமல்

அதற்கொரு வழி சொல்லடி

இதயத்தை திறந்து வையடி

அதற்கொரு வழி சொல்லடி

உன் இதயத்தை திறந்து வையடி...!


நேசிக்கும் மனமொன்று தவிக்குது இங்கே

உனை சுவாசிக்க தானே துடிக்குது அன்பே

நேசிக்கும் மனமொன்று தவிக்குது இங்கே

உனை சுவாசிக்க தானே துடிக்குது அன்பே

நான்காண்டு காலம் நடந்திடும் நாடகம்

நாளொன்று பார்த்து முடித்திடு நீயே

உன் கையில் நான்

என் கையில் நீ

வரும் நாள் வருமோ விடை நீயே சொல்லடி...!


(காற்றில் மிதக்கும்...)


பார்வைகள் இடம் மாற பாதைகள் வேண்டுமா

வரம் தரும் தேவதையே வரமாக கூடுமா

பார்வைகள் இடம் மாற பாதைகள் வேண்டுமா

வரம் தரும் தேவதையே வரமாக கூடுமா

இதழ்களை நீ குவித்தால் குழல் நூறு பாடுமே

எரிமலை கூட அன்று என் தாகம் தீர்க்குமே

ஒரு கேள்வி உன்னிடம்

உனை தருவாயா என்னிடம்

தந்தால் தருவேன் என் உயிரையே உன்னிடம்...!


காதல் சிறிதும் குறையாமல்

விழிகள் ஒருநொடி இமைக்காமல்

உன் முகமே தேடுதடி

என்னுயிர் முழுதுமே நீயடி

அதற்கொரு வழி சொல்லடி

உன் இதயத்தை திறந்து வையடி...!


டிஸ்கி :

சென்ற வருடம் நான் 'ஈஷா யோகா' வகுப்பிற்கு சென்றிருந்தேன். அங்கே பயிற்சிகள் ஆரம்பிக்கும் முன் மனதை ஒருநிலைப்படுத்த சில நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டியிருக்கும். அப்போது ஒரு இசை ஒளிபரப்பப்படும். அவ்வகுப்பிற்கு நீங்கள் சென்றிருந்தால் கட்டாயம் இதன் அருமை தெரிந்திருக்கும். என்னை மிகவும் கவர்ந்துவிட்ட அந்த அருமையான இசையை வரிகளாக்க முயற்சித்து நான் எழுதிய பாடல் இது.



அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!

Related Posts with Thumbnails