Tuesday, December 14, 2010

தோழிக்காக..!

ன் நட்பெனும் வானத்தில்
நட்சத்திரங்கள் பல..,
ஆனால் நிலா ஒன்றுதான் - அது
நீ மட்டும் தான்..!
வளர்ந்தாலும் தேய்ந்தாலும் - அது
என் வானத்தில் தான்..!

************************

ன்னுயிர் தோழியே,
என் இறப்பு என்பது
உனக்கு இழப்பு - ஆனால்
உன் இழப்பு என்பதே
எனக்கு இறப்பு..!

************************

தோற்பது என்
தோழியிடம் தான் என்றால்
நான் எவ்வளவு வேண்டுமானாலும்
தோற்கத் தயார் - அந்த
தோல்வியில் வென்றுவிடுவது
என் நட்பு என்பதால்..!

************************

ண்களில் துயருடன் தோழி நிற்க,
துடைக்க வழியின்றி - நான்
திரும்பி நிற்க,
எனை உணர்ந்தவளாய்
கண்களை மறைத்தபடி - அவள்
கண்ணீரைத் துடைக்கிறாள்
ஆனால்
கண்களை மறைக்கத் தெரிந்த அவளுக்கு
தன் காதலை மறைக்க தெரியவில்லையே....!

************************

கையிரண்டில்
ஐயிரண்டு
விரல் கொண்டிருந்தும்,
கைகட்டி நின்றிருந்தேன் - தோழியின்
கண்ணீர் துடைக்க வழியின்றி..!


************************



ண்ணீர்..,
தோழியின் கண்ணீருக்கு
என்னால் தரமுடிந்த
ஒரே ஆறுதல்..!

************************

Monday, November 15, 2010

சில கவிதை(கிறுக்கல்)கள் - 6

கண்களை மூடியதேன்னவோ நீ!
ஆனால்
இருண்டதடி என் உலகம் ..!

************************

காலனுக்கும்
மரணம் வரும்..,
காதலில் விழுந்தால்..!

************************

பலமுறை பிரிந்திருந்தாலும்
புதிதாய் வலிக்கிறதடி எனக்கு
ஒவ்வொரு முறையும்..!

************************

ஆமை நுழைந்த இல்லமாய்
ஆகிவிட்டது என் உள்ளம்
அவள் நுழைந்த பிறகு..!

************************

நாமே மறந்துவிட்ட
நம் காதலை
பாவம் - அந்த கள்ளி
இன்றும் சுமந்துகொண்டிருக்கிறது..!

************************

Saturday, October 2, 2010

விடுதலை



புசித்துவிட்ட மேகமதன்
ஊண்கிழித்து வெளிவருமாம்
நிலவுதனைப் போல..,
என்னுயிர் குலைத்தவள்
மோகமதன்
வேரறுத்து வெளிவரும்
எம்மனததன் மகிழ்வந்த
முழுநிலவினை ஒத்திருக்கும்...!

------------------------------------------
-

Monday, August 9, 2010

நிலாக்காலம் :


நெருங்கி வராததால் தான்
இன்னமும்
அழகாய் தெரிகிறார்கள்
நிலவும், அவளும்...!

********************************



நிலவை அடைவேன் என்றெண்ணி
நான் செய்த முயற்சிகளனைத்தும்
என் வீட்டு
மொட்டை மாடியிலேயே
முடிந்துவிட்டன...!

********************************



நீ தந்த முத்தங்களை
எண்ண மறந்ததால்
இப்போது எண்ணிக்கொண்டிருக்கிறேன்
வானில் நட்சத்திரங்களை,
தனிமையில் அமர்ந்து...!

********************************



பிடிக்க முடியாத நிலவைக் காட்டி
பிடித்துத் தருவேன் எனச்சொல்லி,
குழந்தைக்கு சோறூட்டும்
அன்னையைப் போல,
உன்னைக்காட்டி என் மனதிற்கு
கவிதைகளை ஊட்டுகிறேன் நான்...!

********************************


Saturday, August 7, 2010

இதோ வந்துட்ட்ட்ட்...டேன்...!


லையுலக நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் என் வணக்கங்கள்...! கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது நான் இந்த பக்கம் வந்து. சில பல மன கசப்புகளால் வலைப்பக்கத்தில் எழுதும் ஆர்வம் குறைந்துவிட்டதே அதன் காரணம். எழுதுவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் எழுதாமல் தவிர்த்துவிட்டேன். இந்த மூன்று மாதங்களில் ஏகப்பட்ட அனுபவங்கள், பயணங்கள், திரைப்படங்கள், மொக்கைகள், இப்படி பல 'கள்'கள் நிகழ்ந்துவிட்டன.

துவரைக்கும் எழுதி கிழிச்சது ஒன்னும் இல்ல, இதுக்கு மேலயும் ஏதும் கிழிக்கப் போறதில்லை. இருந்தாலும், நானும் 'ரௌடி' தான்யானு சொல்லி வான்ட்டடா வண்டில ஏறிட்டு இப்டி திடீர்னு 'U' அடிச்சுட்டனேனு நெனைக்கும்போது கொஞ்சம் பீலிங்கா இருக்கு. அதுமட்டுமில்லாம நான் திரும்ப எழுதுற வரைக்கும் எதுவும் சாப்பிட மாட்டோம்னு சொல்லி ஊர்ல பலபேர் உண்ணாவிரதம், போராட்டம்னு ஆரம்பிச்சுட்டாங்களாம். நேத்து கூட அமெரிக்கால ஒருத்தர் தீக்குளிக்க முயற்சி பண்ணினதா கேள்விப்பட்டேன். என்னாலதான் தீவிரவாதம் பரவுறதா அமெரிக்க உளவுத்துறை எனக்கு போன் போட்டு கெஞ்சுறாங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு. என் எழுத்து மேல மக்கள் எவ்ளோ பாசம் வெச்சிருந்தா இப்படியெல்லாம் பண்ணுவாங்க..? இவங்களுக்கு நான் என்ன செய்ய போறேன்..? நாலு பேர்க்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதனால, நல்லா யோசிச்சு இந்த முடிவுக்கு வந்துட்டேன். என்ன முடிவா..? அதாங்க, நான் திரும்பவும் என் எழுத்துப் பணியை தொடரப்போகிறேன். இனியும் என்னால மக்கள் கஷ்டப்படறத வேடிக்கை பார்த்துகிட்டு சும்மா இருக்கமுடியாது.

"நீ இதுவரைக்கும் எழுதி கிழிச்சதே போதும், அப்டியே ஓடிடு"ங்குற உங்க மைன்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன். பட், ஒரு இந்திய குடிமகனா, தீவிரவாதத்தை ஒழிக்குற பொறுப்பு எனக்கும் இருக்கு. ஸோ, என்ன யாரும் தடுக்காதீங்க..!



து என்னோட 50 வது பதிவு. கொஞ்சம் டெஸ்ட் மாட்ச் மாதிரி ஆய்டுச்சு. இனிமே ஒன் டே ஆட முயற்சி பண்றேன். மீண்டும் சந்திப்போம்...!


- அறிவு GV.


Monday, May 31, 2010

காதல்



காற்றில் மிதக்கும் என் காதல்

உன் கண்கள் இன்னும் திறக்காமல்

அதற்கொரு வழி சொல்லடி

இதயத்தை திறந்து வையடி

அதற்கொரு வழி சொல்லடி

உன் இதயத்தை திறந்து வையடி...!


நேசிக்கும் மனமொன்று தவிக்குது இங்கே

உனை சுவாசிக்க தானே துடிக்குது அன்பே

நேசிக்கும் மனமொன்று தவிக்குது இங்கே

உனை சுவாசிக்க தானே துடிக்குது அன்பே

நான்காண்டு காலம் நடந்திடும் நாடகம்

நாளொன்று பார்த்து முடித்திடு நீயே

உன் கையில் நான்

என் கையில் நீ

வரும் நாள் வருமோ விடை நீயே சொல்லடி...!


(காற்றில் மிதக்கும்...)


பார்வைகள் இடம் மாற பாதைகள் வேண்டுமா

வரம் தரும் தேவதையே வரமாக கூடுமா

பார்வைகள் இடம் மாற பாதைகள் வேண்டுமா

வரம் தரும் தேவதையே வரமாக கூடுமா

இதழ்களை நீ குவித்தால் குழல் நூறு பாடுமே

எரிமலை கூட அன்று என் தாகம் தீர்க்குமே

ஒரு கேள்வி உன்னிடம்

உனை தருவாயா என்னிடம்

தந்தால் தருவேன் என் உயிரையே உன்னிடம்...!


காதல் சிறிதும் குறையாமல்

விழிகள் ஒருநொடி இமைக்காமல்

உன் முகமே தேடுதடி

என்னுயிர் முழுதுமே நீயடி

அதற்கொரு வழி சொல்லடி

உன் இதயத்தை திறந்து வையடி...!


டிஸ்கி :

சென்ற வருடம் நான் 'ஈஷா யோகா' வகுப்பிற்கு சென்றிருந்தேன். அங்கே பயிற்சிகள் ஆரம்பிக்கும் முன் மனதை ஒருநிலைப்படுத்த சில நிமிடங்கள் தியானம் செய்ய வேண்டியிருக்கும். அப்போது ஒரு இசை ஒளிபரப்பப்படும். அவ்வகுப்பிற்கு நீங்கள் சென்றிருந்தால் கட்டாயம் இதன் அருமை தெரிந்திருக்கும். என்னை மிகவும் கவர்ந்துவிட்ட அந்த அருமையான இசையை வரிகளாக்க முயற்சித்து நான் எழுதிய பாடல் இது.



அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!

Thursday, April 15, 2010

சில கவிதை(கிறுக்கல்)கள் - 5

-------------------------------------------------------------
அனைத்து தமிழ் மக்களுக்கும், வலையுலக நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...!
-------------------------------------------------------------



தயத்தை தொலைத்ததென்னவோ
நான் தான் - ஆனால்
திருடி பட்டமோ
அவளுக்கு...!

-------------------------------------------------------------


ரை தொடாமல் பாதியில்
தெறித்து விழும் அருவி...!
கரை தொடாமல் காற்றில்
தவழ்ந்து வரும் அலை...!
இவையிரண்டும்
வெண்மையின்றி கருமையாய் தெரிந்தால்,

அது தான்
என்னவள் கூந்தல்...!

-------------------------------------------------------------


தா
ன் சேமித்ததை
தானே செலவு செய்பவன்
புத்திசாலியாம்..,

உனக்கென சேமித்த காதலை
யாருக்கென செலவு செய்வது எனத்தெரியாமல்
எனக்குள்ளேயே வைத்திருக்கும்
முட்டாள் நான்...!

-------------------------------------------------------------


னக்கான மஜ்னு
நான் இல்லை..,
எனக்கான லைலா
நீ இல்லை - இருந்தாலும்
நாம் இருவரும்
லைலா மஜ்னு தான்...!
-------------------------------------------------------------


நீ
மறுத்துவிட்டாலும்
நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்,
உன்னைப்போல் இன்னும்
ஆறு பேரை படைத்திருக்கிறானாமே...!

-------------------------------------------------------------


அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!

Wednesday, April 7, 2010

நானென்பது யாரெனில்..!


ள்ளிழுத்து மீண்டும்
வெளித்தள்ளுவதில்
கடலலையை மிஞ்சுகிறது
என் கம்பெனி..!

திசை தெரியாமல்
சுற்றித்திரியும் காற்றில்,
உதிர்ந்துவிட்ட ஒரு
பறவையின் சிறகாய்..,

ண்ணாமூச்சி விளையாட்டில்
எப்போதும் தொடப்படும்
சிறுவனாய்..,

ழை வரும் என்று நம்பி
வெடித்த நிலத்தில் நின்று
வானம் பார்க்கும்
விவசாயியாய்..,

லக்கில்லா மைதானத்தில்,
அங்கும் இங்குமாக
அனைவராலும் உதைபடும்
பந்தாய்..,

ன் கைக்கு வரும்போது
ஐஸ்கிரீம் உருகிவிட,
கரத்திலிருக்கும் குச்சியை வெறிக்கும்
குழந்தையாய்..,

- நான் இங்கே துடிக்க..!

பார்ப்போருக்கு நல்ல கேளிக்கை தான்,
நடிகன் வீட்டு
நாய்க்குட்டி அல்லவா அவர்கள்..!

வெளியிலிருந்து வீசப்படும்
விமர்சனங்கள் மட்டுமே
அவர்களுடையது..!

வையனைத்தையும்
புன்னகையுடன் ஏற்று,
பனிவிலக
பகலவனுக்காக காத்திருக்கும்
எனக்குமட்டும் - ஏன்
இருளே நீண்டுகொண்டு போகிறது...?



டிஸ்கி : ஆபீசில் என் தற்போதைய ப்ராஜெக்ட்(உம்), ஆரம்பிக்கும்முன்பே மூடப்பட்டுவிட்டது. அதன் வெளிப்பாடே இந்த கவிதை.



அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!

Friday, April 2, 2010

பையா : திரைவிமர்சனம்



டத்தின் கிளைமேக்ஸ் சண்டையில் ஹீரோ கார்த்தி வில்லன் மிலிந்த் சொமனிடம் இரும்பு ராடால் 15-20 அடி வாங்கிய பிறகு நாயகி தமன்னாவை காப்பாற்ற 27 பேரை(எண்ணிட்டோம்ல) தனி ஆளாக அடித்து வீழ்த்துகிறார். இந்த ஒரு வரியே போதுமென்று நினைக்கிறேன் படத்தைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ள.

பெங்களூருவில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றித்திரியும் கார்த்தி, தமன்னா மீது கண்டதும் காதல் கொள்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் தமன்னாவிற்கு உதவி செய்யும் வாய்ப்பு கிடைக்க அதை சரியாக பயன்படுத்திக்கொள்கிறார். அது தமன்னாவை சென்னையில் கொண்டு சேர்ப்பது. ஆனால் தமன்னாவின் வேண்டுகோளுக்கிணங்கி, உடன் வந்தவரை விட்டுவிட்டு பெங்களூரு ஏர்போர்ட் செல்கிறார்கள். அங்கு விமானத்தை அவர் தவறவிட, பின் ரயிலிலும் செல்ல முடியாத நிலை. தன்னை எப்படியாவது மும்பையில் உள்ள தனது பாட்டி வீட்டில் கொண்டுபோய் சேர்க்கமுடியுமா என அவர் கார்த்தியை கேட்க, உள்ளுக்குள் காதல் கொண்டாட்டத்துடன் மும்பைக்கு காரை விரட்டுகிறார் கார்த்தி. வழியில் அவருக்கு என்ன பிரச்சனை என்று கார்த்தி கேட்ட பிறகுதான் தெரிகிறது அவரை கட்டாய திருமணத்திற்கு அழைத்துச் சென்றார்கள் என்பது. அனைத்தையும் அவ்வப்போது தனது நண்பர்களிடம் மகிழ்ச்சியுடன் சொல்லி மொக்கை போடுகிறார் கார்த்தி. அவ்வப்போது இவர்களை துரத்தும் ஆந்திரா கும்பலிடம் இருந்து தப்பிக்கிறார்கள். இதனிடையே மூன்று பாடல்கள் முடிந்துவிடுகின்றன. பிறகு வேறு ஒரு கும்பல் இவர்களை துரத்த, அப்போதுதான் தெரிகிறது இந்த கும்பல் துரத்துவது தமன்னாவை அல்ல, கார்த்தியை. இது மும்பை கும்பல். இவர்கள் அனைவரையும்(எத்தனை பேர்னு என்ன மறந்துட்டேன்) கார்த்தி அடித்து துவம்சம் செய்ய, இடைவேளை வருகிறது...!

பிறகு கார்த்தி தான் மும்பை பிளாஷ்பேக்கை சொல்கிறார். அந்த பிரச்சனையில் மிலிந்த் சோமனின் ஆட்கள் 10 -15 பேரை அடித்து சாய்த்தது தெரியவருகிறது. இனி என்ன நடக்கும் என்பது தமிழ் சினிமா பார்க்கும் குழந்தைக்குக் கூட தெரியும் என்றாலும் புதிதாக காட்டுவதுபோல் கதையை நகர்த்துகிறார் இயக்குனர். இப்போது கார்த்தியை தேடும் மும்பை கும்பலும், தமன்னாவை துரத்தும் ஆந்திர கும்பலும் கை கோர்த்துக்கொள்ள, அதே சமயம் கார்த்தி மும்பையில் முன்பு உதவி செய்த நண்பன் ஜெகனிடமே தமன்னாவுடன் அடைக்கலமாகிறார். ஜெகன் தமன்னாவின் பாட்டி இருப்பிடத்தை கண்டுபிடிக்க, கார்த்தி அவரை அங்கே விட்டுவிட்டு, தன் காதலை சொல்லாமலே துயரத்துடன் கிளம்புகிறார். (இந்த இடத்தில் ஆடியோ கேசட்டில் இல்லாத ஒரு புது பாடல் வருகிறது, பாடல் வரிகள் அருமை). பிறகு அந்த கும்பல் இவர்கள் இருவரையும் கண்டுபிடித்தார்களா, அவர்களை கார்த்தி எப்படி பந்தாடுகிறார், கார்த்தியின் காதல் கைகூடியதா என்பதெல்லாம் திரையில் பார்த்துக்கொள்ளுங்கள்.

யக்குனர் லிங்குசாமிக்கு கற்பனை கொஞ்சம் வரண்டுவிட்டது போல் தெரிகிறது. தனது படங்களையே ரீமேக் செய்ய ஆரம்பித்துவிட்டார். வழக்கமாக அவர் கையாளும் அதே கதை மற்றும் திரைக்கதை. பாடல்களை படமாக்கிய விதமும் சுமார் தான். பாடல்களை மிகவும் எதிர்பார்த்து போன எனக்கு பெரிய ஏமாற்றம் தான். ஒரே ஒரு புதுமை, பெங்களூரு-மும்பை பயணத்திலேயே முக்கால் வாசி படம் நகர்வதுதான். மற்றபடி புதுக்கோட்டையிலிருந்து சரவணன், கில்லி, சண்டைகோழி, பீமா என கலந்துகட்டி அடித்துள்ளார். நாயகன் கார்த்தி மற்ற இரண்டு படங்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறார். கொஞ்சம் அழகாகவும் தெரிகிறார். ஆனால் நாயகி தமன்னா அப்படியில்லை. சில இடங்களில் பயமுறுத்துகிறார்.

சிறிதுநேரமே வந்தாலும் நகைச்சுவையில் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார் ஜெகன்(சந்தானத்தை போட்டிருக்கலாம்). இரண்டாவது 'கெட்டப்' அருமை. பாராட்டப்பட வேண்டிய ஒருவர் படத்தின் ஒளிப்பதிவாளர் மதி. அந்த 'மிட்ஷுபிஷி லான்சர்' காரும். ச்சேசிங் சீன்கள், 'அடடா மழைடா' பாடலில் வரும் அதிரப்பள்ளி அருவி என சிறப்பாக செய்துள்ளார். யுவனின் இசை பாடல்களில் மட்டுமே நன்றாக உள்ளது. பின்னணி இசை சற்று சொதப்பல். நா.முத்துக்குமாரின் வரிகள் கலக்கல். கனல் கண்ணனின் சண்டைக்காட்சிகள் மிகவும் அபத்தம். அத்தனை அடியாட்களை எங்கிருந்து பிடித்தார்களோ தெரியவில்லை. எத்தனை பெரிய இரும்பு கம்பியாக இருந்தாலும் கைகளிலேயே தடுத்துவிடுகிறார் நாயகன். அனைவரின் கழுத்து, கை, கால் மற்றும் முதுகு எலும்புகளை படக் படக்கென உடைத்துவிடுகிறார். நம்ம லிங்குக்கு இன்னும் பீமா பீதி குறையவில்லை போல.

முதல் முறை படத்தை பார்க்கும்போதே இரண்டாவது முறை பார்ப்பதுபோல் ஒரு பீலிங். டைம் பாசுக்காக இல்லாமல் எதாவது எதிர்பார்த்து போனீர்களானால் கொலைவெறி நிச்சயம். வேற என்ன சொல்ல. ஆயிரத்தில் ஒருவனையே கிழித்து தோரணம் கட்டினார்கள். இது எப்படியோ...?


பையா : சூப்பர் (ட்ரெய்லர் மட்டும்)...!


டிஸ்கி : மூன்றாவது படத்திலேயே கார்த்தி 50 பேரை அடிக்கும்போது, ஐம்பதாவது படத்தில் இளைய தளபதி 100 பேரை பந்தாடுவதில் தவறே இல்லை என நான் நினைக்கிறேன். ஒருவேளை இப்படத்தில் நம் தளபதி நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ...?


அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!

Wednesday, March 31, 2010

அறிவு GV'யும் பிரபல கம்பெனி இண்டர்வியு'வும்



னக்கு ப்ராஜெக்ட் போன கதைய போன பதிவுல படிச்சிருப்பீங்க. 2 வாரம் முன்னாடி ஒருநாள் RMG'லேர்ந்து கால் வந்துது. ஆஹா, நமக்கு ஒரு அடிமை சிக்கப்போறான் போல இருக்கேன்னு ஆவலோட போய் அவர பாத்தா, 'நம்ம எம்ப்ளாயீ ஒருத்தருக்கு திடீர்னு ஒடம்பு சரியில்லாததால ICU'ல சேர்த்திருக்கோம், நாளைக்கு நீங்க ப்ரீயா இருந்தா கொஞ்சம் போய் பாத்துக்க முடியுமா'னு கேட்டார். அதாவது, 'நீ வெட்டியா தான இருக்க, இங்க வந்து தேய்க்க வேண்டிய சீட்ட ஹாஸ்பிட்டல்ல போய் தேய்'னு சொன்னார். இந்த மாதிரி சமூக சேவையெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்னு அவர்கிட்ட சொல்லி சமாளிச்சுட்டு, மறுநாள் அந்த ஹாஸ்பிட்டலுக்கு போனேன். அது ஒரு மொக்கை இடம். பில்டிங் தான் பெருசா இருக்கே தவிர, ஒரு நர்ஸ் கூட நல்லா இல்ல. சத்திய சோதனைடா ஜீவின்னு தலைல அடிச்சுகிட்டே வெளிய வந்து வேடிக்கை பாக்கும்போது என் ஆபீஸ் நண்பன் போன் பண்ணினான்.

சும்மா இருந்த சிங்கத்த சொரிஞ்சுவிட்ட கதையா, 'வாடா மச்சான், இந்த வீக்கென்ட் ஒரு இண்டர்வியு போலாம், பெரிய கம்பெனி, நல்ல பேக்கேஜ் கேக்கலாம்'னு கூப்பிட்டான். A,B,C,D'ல எட்டாவது எழுத்து என்னன்னு கேட்டாலே நான் அஞ்சு நிமிஷம் யோசிப்பேன். நமக்கு எண்டா இந்த வம்புனு யோசிக்கும்போது, அவனுக்கு போன் பண்ணின அதே கன்சல்டன்சிலேர்ந்து ஒரு புள்ள போன் பண்ணி 'நீங்க கண்டிப்பா சண்டே வந்து இன்டர்வியு அட்டென்ட் பண்ணனும், இல்லன்னா நான் கோவிச்சுப்பென்'னு ஆசையா கேட்டதினால என் கல் நெஞ்சம் கரைஞ்சுடுச்சு. ஊருக்கு போறதா இருந்த ப்ளான மாத்தி, இண்டர்வியு போக முடிவு பண்ணி, ப்ரிபேர் பண்ண ஆரம்பிச்சேன். கஜினி சூர்யா மாதிரி, படிக்கிறதெல்லாம் பத்து நிமிஷத்துல மறந்து போக, இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது, நேரடியா களத்துல சந்திச்சுக்கலாம்னு விட்டுட்டேன். அந்த ஞாயித்துக் கிழமையும் வந்துச்சு. ஏதாவது அதிசயம் நடக்காதான்னு நானும் ஸ்ரீ ஸ்ரீ நித்யானந்த சுவாமிகளை வேண்டிகிட்டு நண்பனோட அந்த ஆபீசுக்கு போனேன்.

பீஸ் சுமாரா தான் இருந்துது. எங்க ஆபீஸ் பரவாயில்ல. அங்க நமக்கு முன்னாடியே ஆறு, ஏழு ஜீவிங்க வந்திருந்தாங்க. எங்கள பாத்த உடனே, 'உங்க பிகர நான் உஷார் பண்ணிக்கிட்டு போயிட்டேன்னா உங்க மூஞ்சி எப்டி இருக்கும்?', அந்த மாதிரி வெச்சிகிட்டாங்க. இண்டர்வியு தொடங்குச்சு. 'வெளக்கி வெச்ச அலுமினிய குண்டா' மாதிரி தலையோட ஒருத்தன் இண்டர்வியு பண்ணிக்கிட்டு இருந்தான். அத பாத்து நாங்க காமெடி பண்ண, அதை அவன் பாத்துட்டான். அப்பவே எழுந்து போய்டலாம்னு சொன்னேன், என் நண்பன் கேக்கல. நல்ல வேளையா எங்களுக்கு வேற ஒரு தாய்க்குலம் தான் வந்தாங்க. மொதல்ல என் நண்பன் போனான். நானும் அங்கே இருந்த லைட்டு, சேர், போஸ்டர் எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆர்வமா போன நண்பன் 20 நிமிஷம் கழிச்சு காத்துபோன பலூன் மாதிரி தலைய சொறிஞ்சுகிட்டு வரும்போதே என்னோட முடிவும் சேந்து தெரிஞ்சுது. இருந்தாலும், கேள்வி கேக்குறவன் மனுஷன், பதில் தெரிஞ்சவன் வீரன், தெரிஞ்ச மாதிரி நடிக்கிறவன் மாவீரன்.., நீ மாவீரன்டா அறிவு GV'னு பெரியவங்க என்னைப்பத்தி சொல்லியிருந்ததால தைரியமா போனேன்.

ந்த அறிவு GV க்கு தற்பெருமை பிடிக்காதுன்னு தெரியாம அவங்க "Tell Me About Yourself"னு கேட்டுட்டாங்க. அதுக்கு நான் சொன்ன பதில வெச்சே அந்தம்மா முடிவு பண்ணிட்டாங்க, இந்த Blog பேர் மாதிரிதான் நானும்னு. அப்பறம் ஒரு கேள்வி கேட்டாங்க. அப்டின்னா என்னான்னு பதிலுக்கு நான் கேக்க, அதே கேள்விய வேற மாதிரி கேட்டாங்க. 'ஓ, அதுவா..!'னு கேட்டு நானும் ஒரு பதில் சொன்னேன். அத கேட்ட உடனே, பாக்கியராஜ் படத்துல ஒரு ஹிந்தி வாத்தியார் வருவாரே, 'ஏக் காவ் மே, ஏக் கிசான் ரஹா தாத்தா'னு சொல்லிக்கிட்டு, அவர மாதிரி அவங்க மூஞ்சி மாறிடுச்சு. திரும்பவும் அதே கேள்விய வேற மாதிரி மாத்தி கேக்க, நானும் நமக்கு தெரிஞ்ச மாதிரியே, 'is, was, that' மாத்திபோட்டு முன்னாடி சொன்ன அதே பதிலை சொன்னேன். அதை கேட்டுட்டு அவங்க கைல வெச்சிருந்த என் ரெஸ்யூம கசக்க ஆரம்பிச்சாங்க. சரி இதுக்கு மேல இங்க இருந்தா, அவங்க கொலை கேஸ்ல உள்ள போக வேண்டியிருக்கும்'னு நெனச்சு 'Thanks for the wonderful opportunity'னு சொல்லிட்டு அங்கேயிருந்து கம்பி நீட்டிட்டேன். வெளிய வந்தபிறகுதான் தெரிஞ்சுது என் நண்பனுக்கும் அதே கேள்வி தான்னு. அவன் என்ன பதில் சொன்னானோ...!!!


டிஸ்கி : இதுலேர்ந்து நம்ம கத்துக்க வேண்டியது என்னன்னா.., கேள்வி கேக்குறது ஈசி. ஆனா, அதுக்கு நம்ம சொல்ற பதில கேக்குறது தான் ரொம்ப கஷ்டம்...!


அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!

Tuesday, March 2, 2010

பக்கோடா பாக்கெட் - 1


ணக்கங்க...! யார பாத்தாலும் வாரா வாரம் அவங்கள பாதிச்ச விஷயங்கள ஒரு பதிவா போட்டுடுறாங்க. தலைப்ப கூட கொத்துபரோட்டா, மசால் தோசை, துவையல், கெட்டி சட்னின்னு சாப்பிடுற ஐட்டமா வெச்சுகிறாங்க. அட நம்ம தானை தலைவர் ஹாலிவுட் பாலா கூட 'பிட்ஸ் அண்ட் பைட்ஸ்'னு ஆரம்பிச்சுட்டார். (ஒழுங்கா இருந்த அவரையும் யாரோ கெடுத்துப்புட்டாங்க, பாவி பசங்க. ஹ்ம்ம், நல்லாயிருங்க..!). அதனால நானும் 'பக்கோடா பாக்கெட்' ங்கற பேர்ல உங்ககிட்ட மொக்க போட முடிவு பண்ணியிருக்கேன். அதை படிச்சுட்டு பீல் பண்ணுவீங்களோ.., இல்ல காரி துப்புவீங்களோ, அது உங்க இஷ்டம்...!

2010 நல்லபடியா ஆரம்பிச்சுதுங்க. ஜனவரி மாசம் ரொம்ப நல்லா போச்சு. புது வருஷம், புது ப்ராஜெக்ட், புது மொபைல், 'பொங்கல்' சாகசங்கள் அப்டி இப்டின்னு நானும் சந்தோஷமா இருந்தேன். இது புடிக்காம யார் செய்வினை வெச்சாங்களோ தெரியல, திடீர்னு நியூட்டனோட மூன்றாம் விதி வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு.

கொறஞ்சது ரெண்டு நாளைக்கு ஒரு படமாவது என் சிஸ்டம்ல பார்த்திடுவேன். (அப்ப தான் பாலா, கருந்தேள் எல்லாரையும் ப்பாலோ பண்ண முடியும்). ஆபீஸ கட் அடிச்சிட்டேல்லாம் வந்து படம் படம் பார்த்திருக்கேன்னா பாத்துக்கோங்க. கொஞ்ச நாளா என் CPU பக்கத்துல ஏதாவது சாப்பிடற பொருள் கிடந்துகிட்டே இருந்துது. நானும் என் ரூம்மேட்ஸ திட்டிட்டு விட்டுட்டேன். அப்பறம் அந்த CPU'வ தொறந்து பாத்தா, உள்ள ஒரு எலி..! அப்பப்போ வந்து போகும்னு நெனச்சு விட்டிருந்தா, அது குடும்பம் நடத்தி குட்டியே போட்டிருந்துச்சு. வந்த கோவத்துல அத குடும்பத்தோட அடிச்சி காலி பண்ணிட்டேன். அது பத்தினி எலி போல, அந்த சாபம், ஒரு வாரம் கழிச்சு என் ஹார்ட் டிஸ்க் காலி. பேக்கப் எதுவுமே இல்ல. இத்தன வருஷ போட்டோஸ், மூவீஸ், டாகுமென்ட்ஸ், சாப்ட்வேர்ஸ் எல்லாம் போச்சு. படம் பாக்க முடியாம, பாட்டு கேக்க முடியாம, சாட் பண்ண முடியாம, ரூமுக்கு போனா கடுப்பா வருது.

சின் கல்யாணத்துக்காக ரெண்டு வாரம் முன்னாடி ஊருக்கு போயிருந்தேன். அவருக்கடுத்து கல்யாணத்துக்கு ரெடியா இருக்க மைனர் நான் தான். சீக்கிரமா அதுக்குண்டான வேலைய பாத்திடலாம்னு சந்தோஷமா 'அன்பில் அவன் சேர்த்த இதை'னு பாட்டு பாடிக்கிட்டே, சார்ஜ் போட்டு வெச்சிருந்த என் புது Sony Ericsson மொபைல எடுத்தேன். 'டமால்'னு கீழ விழுததுல டிஸ்ப்ளே காலி.. !அந்த குருட்டு போன வெச்சு ஒரு வாரம் ஓட்டிட்டு, போன வாரம் தான் சர்வீசுக்கு கொடுத்திருக்கேன். அவன் எவ்ளோ தீட்ட போறான்னு தெரியல...!

ரொம்ப நாள் கழிச்சு நம்மள நம்பி(விதி வலியது) ஒரு ப்ரொஜெக்ட்ல போட்டாங்க. அதுலயாவது நம்ம ஒழுங்கா வொர்க் பண்ணி, நானும் 'கில்லி' தான்னு எல்லாருக்கும் நிரூபிக்க கொஞ்சம் 'கஷ்டப்பட்டு(!?)' வொர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஆனா அந்த அமெரிக்காக்காரன் (client தான்) இத எப்டி கண்டுபுடிச்சானோ தெரியல, திடீர்னு டெமோ குடுக்க சொல்லிட்டான். நானும் என் டீமோட உக்காந்து ஒருவழியா அத ரெடி பண்ணி அவனுக்கு டெமோ குடுத்தோம். அந்த மாங்கொட்டை தலையனுக்கு என்ன புரிஞ்சுதோ, "இனிமே இத நாங்களே பாத்துக்குறோம், உங்க அறிவுக்கும் தெறமைக்கும் எங்க கம்பெனிலையே ப்ராஜெக்ட் இல்ல"னு சொல்லி கதவ சாத்திபுட்டான். 'விடுங்க பாஸ், இந்த அமெரிக்காக்காரனுங்களே இப்படி தான், சீக்கிரமா வேற ஒருத்தன் சிக்குவான்னு' அனுபவஸ்தர்கள் சொன்னதுனால திரும்பவும் வேற ப்ரொஜெக்ட்ல நம்மள போடுவாங்கன்னு நம்பி, 'கதவ திறந்து வெச்சுட்டு காத்திருக்கேன்.., காத்து கூட வரமாட்டீங்குது'..!

'பொங்கல்' சாகசம் பத்தி தனியாவே ஒரு பதிவு போடலாம். அவ்ளோ பெரிய பல்ப் வாங்கிட்டேன். அந்த பதிவு விரைவில்.



அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!

கோமாளி


ற்றவரை மகிழ்விக்கும்
கோமாளி நான்...!


ன் துயரம் கேட்கும் செவிகள் இல்லை,
கண்ணீர் துடைக்கும் கரமும் இங்கில்லை,
சாய்ந்து அழ தோளும் இல்லை,
சேர்ந்து நடக்கும் கால்களும் இங்கில்லை,
மீண்டும் வேகிறேன் தனிமைத் தீயில்...!

சி தீர்க்க பணமும்,
கவலை தீர்க்க கவிதைகளும்
காதல் தீர்க்க கனவுகளும்,
மட்டுமே என்வசம்..!

ணைக்குள் அடைந்திருக்கும்
ஆற்று வெள்ளமென
விழித்திரைக்குள் தடுத்துவிட்ட
என் கண்ணீர்த் துளிகளோடு,
ல்லோரும் ரசிக்கும் ஒரு புன்னகையை
முகத்தில் மாட்டிக்கொண்டு,

ற்றவரை மட்டும் மகிழ்விக்கும்
கோமாளி நான்...!
என்னை நானே ஏமாற்றிக்கொள்ளும்
ஏமாளி நான்...!


அதான் புடிச்சிருக்குள்ள, ஒரு ஒட்டு போடுறது...!

Thursday, February 25, 2010

சில கவிதை(கிறுக்கல்)கள் - 4


னி கிடைக்குமோ
கிடைக்காதோ என்றெண்ணி
முழுமையாய் சுவைத்துவிட
எத்தனித்த நேரம்,
முடிந்துவிட்டிருந்தது
அவளின் இறுதி முத்தம்...!

-----------------------------------------------------


ன்றோ
விட்டுவிட்டு போனவள் மீது
இன்றும்
குற்றம் கூறமுடியாமல் தவிக்கும்போது
உணர்கிறேன்,
இன்னும் அவள் மீதுள்ள (மீதமுள்ள) காதலை...!

-----------------------------------------------------


ண் விழித்து
கண்ணாடி பார்க்கும்போதெல்லாம்
என் காதோரம் நரைத்துள்ள
முடிகள் காட்டிக்கொடுக்கின்றன,
நான்
காதலில் தோற்றவன் என்று...!
-----------------------------------------------


ன் கனவுகளை
வேறோருவனிடத்தில் இழந்துவிட்டு
தவித்துக்கொண்டிருக்கும் நேரம்
அவளிடமிருந்து வந்தது
ஒரு குறுஞ்செய்தி,
'நான் நன்றாக இருக்கிறேன், நீ எப்படி இருக்கிறாய்..?'
-----------------------------------------------
வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!

Wednesday, February 24, 2010

சாதனை நாயகன் சச்சினின் அடுத்த உலக சாதனை



மது சாதனை நாயகன் சச்சினின் அடுத்த உலக சாதனை. ஒருநாள் ஆட்டங்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்துள்ளார், அதுவும் 200*. முதல் முறையாக இரட்டை சதம் அடித்த பெருமையும் இவரை சேர்ந்துவிட்டது. தான் தான் கிரிக்கெட் உலகின் முடிசூடிய ராஜா என்று மீண்டும் அழுத்தமாக நிரூபித்துவிட்டார் இன்று.

லக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்த ஒரு விஷயம், யார் முதலில் இரட்டை சதம் அடிப்பார் என்பது. சச்சினால் மட்டுமே இது முடியும் என்பதும் அதில் பலரது நம்பிக்கை. அதை இன்று நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாம் ஒருநாள் போட்டியில் இனிதே நிறைவேற்றியுள்ளார் அதிரடியாய், அதுவும் 147 பந்துகளில், கடைசி வரை ஆட்டமிழக்காமல்.

ட்டையில் பட்ட பந்துகள் அனைத்தும் பவுண்டரிகளுக்கு அனுப்பி பந்துவீச்சாளர்களின் வாய், வயிறு, மூளை என அனைத்திலும் புளி கரையவிட்டுவிட்டார். அவரது அதிகபட்ச ஸ்கோரான 186 யை தாண்டியதும் உற்சாகமும் மகிழ்ச்சியும் பீறிட்டது. எங்கள் ஆபீசில் மேட்ச் ஓடாததால் (TV யே இல்லை..!) கீழ் ப்ளோரில் இருந்த வேறொரு ஆபீசிற்கு சென்று நண்பர்களுடன் மேட்சை பார்த்தேன். கண்டிப்பாக 200 நிச்சயம் என்று முடிவு செய்து ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்தோம். ஆனால் இறுதியில் நம் வயிற்றில் புளியை கரைத்தது, காரணம் தோனி. அவர் தன் சிறப்பான ஆட்டத்தால் பந்துகளை கபளீகரம் செய்ய, ஒரு கட்டத்தில் 199 லேயே சச்சின் வெகுநேரம் காத்திருந்தார்.

ன்னதான் தோனி சிக்ஸ்சும், ப்போருமாக அடித்தாலும் எங்கள் வாயிலிருந்து பல கேட்ட வார்த்தைகளைத்தான் வாங்கி கட்டிக்கொண்டார். ஓவர் முழுக்க ஆடிவிட்டு, கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் வந்தார், ஆம்லா. தனது சிறப்பான பீல்டிங் மூலம் தோனி அடித்த இறுதி ஓவரின் இரண்டாவது பந்தை Four செல்லாமல் தடுத்து நம் மக்களிடத்தில் கைத்தட்டு வாங்கினார். அடுத்த பந்திலே தான் சச்சின் அந்த அற்புதத்தை நிகழ்த்தினார். 199 லிருந்து ஒரு சிங்கிள் எடுத்து 200 வது ரன்னை அடைந்து உலக சாதனை நிகழ்த்தினார். கைத்தட்டல்களும், விசில்களும், உற்சாக வாழ்த்துக்களும் அந்த ஏரியாவையே உலுக்கியது. நங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கண்டிப்பாக நீங்களும் அதே மனநிலையில் தான் இருந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

ன்னும் தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆரம்பிக்கவில்லை. நமது அணியின் மொத்த ஸ்கோரான 401 ஐ அவர்கள் துரத்திப்பிடிப்பது கடினமே என்றாலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்கள் அதை நிகழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய நாளாக அமைந்துவிட்டது. அதற்கு முழுக்காரணமும் நமது மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சினையே சேரும்.

ந்திய மக்கள் சார்பாகவும், உலக கிரிக்கெட் ரசிகர்களின் சார்பாகவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சச்சின்...! நீங்கள் செய்யாத ஒரே பணி, இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுப்பதுதான். அதுவும் அடுத்த வருடம் நிறைவேறும் என்பதில் நம்பிக்கையும், ஆவலும் வைத்து காத்திருக்கிறோம்...!



டிஸ்கி : ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை...!





வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...!

Tuesday, February 16, 2010

மரணம் சுவைத்த நண்பன்


வீழ்ந்து கிடந்த நண்பனைப் பார்த்து
வீரிட்டு அழ முடியவில்லை என்னால்..!
மனம் மகிழ்ச்சியில் இருக்கும்போது
எத்தனைமுறை மிதித்திருக்கிறேன் அவனை..,
மன வேதனையில் இருக்கும்போது
எத்தனைமுறை உதைத்திருக்கிறேன் அவனை..,
துயரத்தில் இருக்கும்போது தோள் கொடுத்தானே..,
துவண்டு விழும்போது தூக்கி நிறுத்தும்
எண்ணங்களை வளர்த்தானே..,
இல்லத்திலேயே இருந்து - என்
இன்ப துன்பங்களைப் பகிர்ந்தானே..!
எத்தனை முறை என்
கண்ணீர்த்துளிகள் அவனை முத்தமிட்டிருக்கும்..,
அத்தனைக்கும் தோள் கொடுத்த அவனுக்கு
எவரும் தோள் கொடுக்காததால்
துவண்டு விழுந்துவிட்டானே..!
துண்டு துண்டாய் பிரிந்துவிட்டானே..!
அவனிடத்தில் வேறொருவன் வரலாம்,
ஆனால்
அவன்போல் வருவானா..?
அவன்..,
அன்று பெய்த கடும் மழையில்
இன்று மாண்டுகிடக்கும்
என் வீடு பின் மதில்சுவர்..!



டிஸ்கி :

2005-ம் வருட மழைக்காலத்தில் எங்கள் வீட்டு back compound சுவர் இடிந்து விழுந்துவிட்டது. நெஜமாவே அது எனக்கு நல்ல ப்ரண்டுங்க...! இடிஞ்சு கிடந்தத பாக்கும்போது ரொம்ப வருத்தமாக இருந்தது. அப்போ எழுதின கவிதை(?!) இது...!



சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

Friday, February 5, 2010

சில கவிதை(கிறுக்கல்)கள் - 3

தோழிக்கும் ஒருபடி
மேல் - நீயெனக்கு,
தோழனுக்கும் ஒருபடி
கீழ் - நானுனக்கு..!
தெரிந்தும் சொல்லிக்கொள்கிறோம்
நாமிருவரும் தோழர்கள் என்று...!

-------------------------------------------------------


நீயறியாமல்
நானுனக்குத் தரும்
முத்தங்களனைத்தையும் உன்னிதழ் சேர்க்காமல்,
பிறர் அறியாமல்
திருடிக்கொள்கிறது காற்று...!

-------------------------------------------------------

ன்னைத் தவிர
ஆண்கள் அனைவரும்
தவறானவர்களாகவே தெரிகிறார்கள்
நீ என்னை விட்டுத் தனியே
வெளியில் செல்லும்போது மட்டும்...!

-------------------------------------------------------


வெளிப்படுத்திய அன்புக்கே
விலையில்லாத பொது,
புதைத்து வைத்திருக்கும் அன்பை
புரிந்துகொள்ளவில்லை என்று
வருத்தப்படுவதில்
பொருளேதும் இல்லை ...!

-------------------------------------------------------


தயத்தை துளைக்கும்
வார்த்தைகள் தான்
என்றாலும் ரசிக்க தான் செய்கிறேன்,
உதிர்ந்தவை
அவள் இதழ்களில் இருந்தல்லவா ...!
-------------------------------------------------------
.சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

அசல் : திரை விமர்சனம்


ஜித்....! இவருக்காகவே எழுதப்பட்ட கதை, பின்னப்பட்ட திரைக்கதை, தயாரிக்கப்பட்ட படம்..., அசல்..!

யுத வியாபாரியான அப்பா அஜித்துக்கு லீகல் வாரிசுகள் சம்பத், ராஜீவ் இருவரும். இல்லீகல் வாரிசு இன்னொரு அஜித். நம் தமிழ் சினிமா வழக்கப்படி இதற்குமேல் கதை எப்படி இருக்கும் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அஜித் நல்லவராக இருக்க, அது பிடிக்காமல் அவர்கள் இருவரும் வெறுக்க, ஒரு சுபயோக தினத்தில் அப்பா அஜித் இறக்க, உயிலில் சொத்துக்கள் அனைத்தும் மகன் அஜித் பெயரில் இருக்க, அவர்களுக்கு நல்லதே செய்தாலும், சொத்துக்காக அஜித்தை போட்டுத்தள்ள இருவரும் முயற்சிக்க, அவரை காப்பாற்றி காதலிக்க இரண்டாவதாய் ஒரு லூசு கதாநாயகி (பாவனா) வர, அவர்களுக்கு மகன் அஜித்தின் சிறுவயது கார்டியன் பிரபு உதவி செய்ய, கடைசியாக வருகிறது க்ளைமாக்ஸ். அதுவும் வழக்கமானது தான். அதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். ஒரே ஒரு வித்தியாசம், அனைத்து பிரான்சில்..!

ஜித் மிக ஸ்டைலாக இருக்கிறார். அதுவும் அந்த 'சிகர்' அடித்துக்கொண்டு நடக்கும்போதும், சண்டை காட்சிகளின் போதும். தன் பங்கை சிறப்பாகவே செய்துள்ளார், கூடவே கதை, திரைக்கதை, வசனமும். ஆனால் பாடல்களில் தான் எப்போதும் நடப்பார், இம்முறை படத்திலும் பல இடங்களில் நடந்துகொண்டே இருக்கிறார். படம் முழுக்க 'கோட்' டிலேயே வருவது நன்றாக இருந்தாலும் சில இடங்களில் அது அவர் உருவத்தை பெரிதாக காட்டுவது மட்டுமின்றி, குளிர் ஜுரம் வந்தவர் போல தோற்றமளிக்கிறது. இன்னும் பில்லா சாயல்போகவில்லை.

மீரா, பாவனா இரு நாயகிகளும் அழகு...! வருகிறார்கள், பேசுகிறார்கள், பாடலில் ஆடுகிறார்கள். அதற்குமேல் நாம் எதிர்பார்க்க முடியாது. 'டொட்டடய்ங்' பாடல் படமாக்கப்பட்ட விதமும், அதில் பாவனாவும் அருமை. பிரபு பத்தி சொல்லனும்னா, என்ன கொடும சார் இது...! சுரேஷ் வரும் ஒவ்வொரு சீனிலும் தானொரு பிரெஞ்ச் போலிஸ் என்பதை மீண்டும் மீண்டும் கூறி, அந்த ஊர் போலீசும் நம்ம ஊர் மாதிரி தானா, வேற வேலை இருக்காதா என்று நம்மை யோசிக்கவைக்கிறார். சம்பத், ராஜீவ் இருவரும் பாவம், கத்துவதை தவிர வேறு வேலை இல்லை இப்படத்தில். இவர்களின் மாமாவாக 'கஜினி' வில்லன், ஒன்னும் எடுபடவில்லை. யூகி சேது, சில இடங்களில் சிரிக்கிறார், பல இடங்களில் கடிக்கிறார். இவருடைய கேரக்டரை விவேக் மட்டும் வடிவேலு பல படங்களில் கிழித்து தொங்கவிட்டுவிட்டதால் இவரை பார்க்கும்போது அவர்களில் ஒருவர் தான் கண்முன் தெரிகின்றனர், குறிப்பாக 'படிக்காதவன்' விவேக்.

பாராட்டப்பட வேண்டியவர்கள் படத்தின் எடிட்டர் ஆண்ட்டனி, ஒளிப்பதிவாளர் பிரசாந்த் மற்றும் ஸ்டன்ட் மாஸ்டர் மூவரும் தான். பிரான்சின் அழகு, சேசிங், சண்டை காட்சிகளின் தரம், வேகம் அனைத்தையும் அருமையாக திரையில் கொண்டுவந்துள்ளனர். இசை (மீண்டும்) பரத்வாஜ். பாடல்கள் சுமார், பின்னணிஓகே.

'மோதி விளையாடு' என்ற மிகப்பெரும் மொக்கை படத்திற்குப் பிறகு மிகுந்த நம்பிக்கையுடன் இயக்கி இருக்கிறார் சரண். ஸ்டைலாகத்தான் வந்திருக்கிறது. ஆனால், முதல் பாதியிலேயே முக்கியமான வில்லனை (கெல்லி) போட்டுவிட்டு, இரண்டாம் பாதியில் யாரும் சிக்காததால் கத்தியை நம் கழுத்தில் வைத்துவிட்டார். அவ்ளோ பெரிய வில்லனை பொசுக்குன்னு முடிச்சிடீங்களே சார். இரண்டாம் பாதியில் எங்களை மிரட்ட ஆளில்லாமல் போய்விட்டதே. அப்பா அஜித்துக்கு ஒரு பிளாஷ்பேக் போட்டுவிடுவார்களோ என பயமாக இருந்தது, நல்லவேளை இல்லை.

முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு, ஆக்க்ஷன், ஸ்டைல் அனைத்தும் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். அப்போதே வந்திருந்தால் கொடுத்த காசிற்கு கொஞ்சம் திருப்தி இருந்திருக்கும்...! நீங்கள் அஜித் ரசிகரை இருந்தால், கட்டாயம் பார்க்கலாம். இல்லையென்றால் அஜீத்துக்காக ஒருமுறை பார்க்கலாம்...!



டிஸ்கி : யாருப்பா சொன்னது, 'தல'க்கு படத்துல பில்ட்-அப்பே கிடையாதுன்னு...? போங்கப்பா, பொய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க...!




சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

Related Posts with Thumbnails