Friday, February 5, 2010

சில கவிதை(கிறுக்கல்)கள் - 3

தோழிக்கும் ஒருபடி
மேல் - நீயெனக்கு,
தோழனுக்கும் ஒருபடி
கீழ் - நானுனக்கு..!
தெரிந்தும் சொல்லிக்கொள்கிறோம்
நாமிருவரும் தோழர்கள் என்று...!

-------------------------------------------------------


நீயறியாமல்
நானுனக்குத் தரும்
முத்தங்களனைத்தையும் உன்னிதழ் சேர்க்காமல்,
பிறர் அறியாமல்
திருடிக்கொள்கிறது காற்று...!

-------------------------------------------------------

ன்னைத் தவிர
ஆண்கள் அனைவரும்
தவறானவர்களாகவே தெரிகிறார்கள்
நீ என்னை விட்டுத் தனியே
வெளியில் செல்லும்போது மட்டும்...!

-------------------------------------------------------


வெளிப்படுத்திய அன்புக்கே
விலையில்லாத பொது,
புதைத்து வைத்திருக்கும் அன்பை
புரிந்துகொள்ளவில்லை என்று
வருத்தப்படுவதில்
பொருளேதும் இல்லை ...!

-------------------------------------------------------


தயத்தை துளைக்கும்
வார்த்தைகள் தான்
என்றாலும் ரசிக்க தான் செய்கிறேன்,
உதிர்ந்தவை
அவள் இதழ்களில் இருந்தல்லவா ...!
-------------------------------------------------------
.சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

11 comments:

Thenammai Lakshmanan said...

//புதைத்து வைத்திருக்கும் அன்பை
புரிந்துகொள்ளவில்லை என்று
வருத்தப்படுவதில்
பொருளேதும் இல்லை//

படமும் வார்த்தைகளும் அருமை அறிவு ஜிவி

நாடோடி said...

கவிதையுமா கலக்குங்க..

அண்ணாமலையான் said...

அருமையா இருக்குது

sarvan said...

நன்றாக இருக்கிறது !

Unknown said...

நீயறியாமல்
நானுனக்குத் தரும்
முத்தங்களனைத்தையும் உன்னிதழ் சேர்க்காமல்,
பிறர் அறியாமல்
திருடிக்கொள்கிறது காற்று...!//


இதுக்கு தான் ஓட்டு

சித்ரா said...

கவிதைகள் மிக அருமை அறிவுGV

Unknown said...

வணக்கம்.கவிதைகள் நன்றாக இருக்கு.தொடருங்கள்.

சாமக்கோடங்கி said...

உடனே ஓட்டு போடணும்னு தோனுச்சு...

நன்றி...

கமலேஷ் said...

///என்னைத் தவிர
ஆண்கள் அனைவரும்
தவறானவர்களாகவே தெரிகிறார்கள்
நீ என்னை விட்டுத் தனியே
வெளியில் செல்லும்போது மட்டும்...!///

இந்த வரி நச்சின்னு இருக்கு...

மற்ற எல்லா கவிதைகளும் ரொம்ப நல்லா இருக்கு...தொடர்ந்து இன்னும் நிறைய எழுதுங்க...

வாழ்த்துக்கள்...

சித்ரா said...

வெளிப்படுத்திய அன்புக்கே
விலையில்லாத கவிதை மிகவும் அருமை !!!!!
Best Friend கவிதையும் என்னை மிகவும் கவர்ந்தது நண்பா !!!!!!

அறிவு GV said...

@ நாடோடி : எதோ என்னால முடிஞ்சது
@ சர்வன்,மின்னல், பிரகாஷ் : வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. மீண்டும் வாங்க.
@ தேனம்மை, அண்ணா, பேநா, சித்ரா, கமலேஷ் : வாழ்த்துக்களுக்கு நன்றி...!

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails