Wednesday, November 18, 2009

கனவுக் கொடுமை : 1

போன ஞாயித்துக்கிழமை ஈவ்னிங்லேர்ந்து நைட் வரைக்கும் மழைல நனைஞ்சுகிட்டே நம்ம சென்னை டிராபிக்ல வீர சாகசமெல்லாம் செஞ்சு வீட்டுக்கு வந்தேங்க. முழுக்க நனைஞ்சப்பரம் முக்காடு எதுக்குன்னு ஹெல்மட்ட கூட கழட்டி கைல வெச்சுகிட்டு தாங்க வந்தேன். அதனால வீட்டுக்கு வந்த பிறகும் ஒரே குளிர். சரி இந்த குளுகுளுப்புலையும் கொஞ்சம் கிளுகிளுப்பா இருக்கட்டுமேன்னு நல்லா இழுத்து பொத்திகிட்டு படுத்தேங்க. அன்னைக்குன்னு பாத்து வந்துது பாருங்க கனவு... (படிக்கும்போதே கற்பனை பண்ணிகோங்க. அப்பத்தான் நல்லா புரியும்).

என் நண்பர் கம் ரூம்மேட் என்னை அவரோட ஆபீஸ்க்கு கூட்டிட்டு போறாரு. அது ஒரு டபுள் பெட்ரூம் வீடு மாதிரி இருக்குங்க . பக்கத்துல பெரிய தண்ணீர் தொட்டியெல்லாம் இருக்கு. அந்த ஏரியாவுக்கே சப்ளை பண்ணுவாங்க போல. ஆபீஸ்குள்ள போனா அங்க ஒருத்தர் சாத்துக்குடி ஜூஸ் போட்டுகிட்டிருக்கார். சரி எனக்கும் கொஞ்சம் கிடைக்கும்னு வெய்ட் பண்ணுனா எல்லாத்தையும் அவரே குடிச்சிடுறார். ஜூஸ் போச்சென்ற காண்டுல நான் ஒரு பாட்டில் தண்ணிய அப்டியே குடிக்க, அவருதான் மேனேஜர்'னு எனக்கு அறிமுகப்படுத்தினார் என் நண்பர். பிறகு வீட்ட சாரி ஆபீஸ சுத்தி காட்டினார், இன்னும் 2 , 3 பேர் அங்க இருந்தாங்க. பேசிக்கிட்டிருக்கும்போது எனக்கு மட்டும் திடீன்னு ஒரு கருகுற வாசனை வர, பக்கத்து ரூமுக்குள்ள போனேன். அங்க பாத்தா ஒரு ஜோடி புறாக்கள் நாங்க வர்றதகூட கவனிக்காம உலக சமாதானத்த பத்தி கடலை போட்டுக்கொண்டிருந்தாங்க. என் நண்பர், 'அடப்பாவிங்களா இங்கயுமா?'னு கேக்கும்போது தாங்க அது நடந்துச்சு.

அந்த ரூம் ஜன்னல் வழியா ஒரு கை வருது அதுல முக்கால் அடில ஒரு கத்தி. அது அப்டியே அந்த பொண்ணோட கழுத்துல எறங்குது. அந்த அறை முழுக்க ரத்தம் தெறிக்க, அதை பார்த்த நானும் என் நண்பரும் டர்ராகி கத்திகிட்டே ரூமைவிட்டு வெளியே வந்தா, அங்க அதைவிட பெரிய பயங்கரம். வாசல் கதவு வழியா இன்னும் இரண்டு பேர் வந்து அங்கே இருக்கிறவங்க எல்லாரையும் கண்டபடி வெட்டுறாங்க, குத்துறாங்க. நானும் என் நண்பரும் தப்பிக்க என்ன பண்றதுன்னே தெரியாம இங்கயும் அங்கயும் ஓட, எனக்கு ஜூஸ் கொடுக்காம குடிச்சாரே அந்த மேனேஜர், அவர் அலர்ற சத்தம் கேக்குது. திரும்பி பாத்தா அவரோட வலது கைய ஒருத்தன் கத்தியால அருத்துக்கிட்டிருக்கான். ரெண்டு அடி தள்ளி கெடந்த ஜூஸ் ஜார நனைக்குது அவர் ரத்தம். சிக்குனா நம்மையும் செதச்சிருவாங்கடா கைப்புள்ளங்கற மாதிரி நானும் என் நண்பரும் அந்த ஆபீஸ்சொட முன் கதவ நோக்கி தெறிக்க ஆரம்பித்தோம்...!

இதோட கனவு கலைஞ்சுருச்சுங்க. நான் என்ன Nicole Kidman, Angelina Jolie, Lindsay Lohan அப்படியா கேட்டேன். கிளுகிளுப்பா படுத்தவனுக்கு இப்படி ரணகளமா ஒரு கனவு வந்தா, மனுஷன் டென்ஷன் ஆகாம என்னங்க பண்ணுவான், நீங்களே சொல்லுங்க.

டிஸ்கி :

விழித்தவுடன் உண்மையாகவே தண்ணீர் குடிக்க வைத்துவிட்ட இந்த கனவின் பின்னணி, அதற்கு முதல்நாள் நான் பார்த்த படம். என்னன்னு கேக்குறீங்களா, அடுத்த வரியைப் பாருங்கள்.
Wrong Turn 3: Left for Dead - விரைவில்.


6 comments:

Unknown said...

konjam kodumaiyana kanavu. nejathil epadi varamal pathukolvom. ethuthan ungaluku ungal kanavu sollum message. :)))))

பேரு ஸ்டான்லீ ங்க.. said...

// வடிவேலு சந்திரமுகியில் : இதுக்கு ஏம்ப்பா இத்தனதடவ திரும்புற,!! அதுக்கு அந்த பேயே பரவால்ல போலிருக்கே..!! //
இப்போ நான் : அவ்வவ்வ்வ்வ்... இதுக்கு அந்த படமே பரவால்ல போலிருக்கே.

அறிவு GV said...

அப்பா, உங்களுக்காவது என் கஷ்டம் புரிஞ்சுதே...! முடியலங்க...! வருகைக்கு நன்றி..!

SUBBU said...

அறிவு ஜீவி ;)

அறிவு GV said...

வாங்க சுப்பு. எதுமே சொல்லாம போனா எப்படி..?

Anonymous said...

Next time english padam paakumpodhu figure kooda paarunga .....kanavulayum....varalam....!

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails