Thursday, November 19, 2009

ஆசைகள்

தலை சாய்க்க தோள் வேண்டாம்
மடி போதும்
விரல் கோர்க்க கரம் வேண்டாம்
கூந்தல் போதும்
கதை பேச செவி வேண்டாம்
இதழ் போதும்
முகம் பார்க்க கண்ணாடி வேண்டாம்
கண்கள் போதும்

நனைந்திட இனி மழை வேண்டாம்
உன் வியர்வை போதும்
காய்ந்திட இனி தீ வேண்டாம்
உன் வெப்பம் போதும்
இரவினில் இனி தூக்கம் வேண்டாம்
உன் ஏக்கம் போதும்
துயில் களைந்திட இனி ஓசை வேண்டாம்
உன் கிள்ளல் போதும்

நடை பயில இனி பாதை வேண்டாம்
உன் நினைவு போதும்
நான் ரசிக்க இனி பாடல் வேண்டாம்
உன் சிணுங்கல் போதும்
இரவினில் இனி நிலா வேண்டாம்
உன் முகம் போதும்
எனை வெல்ல இனி படை வேண்டாம்
உன் இடையே போதும்

எனை மயக்க இனி மலர் வேண்டாம்
உன் மணம் போதும்
நன் சிலிர்க்க இனி தென்றல் வேண்டாம்
உன் சுவாசம் போதும்
பசியெடுக்க, உணவில்லாத போதும்
அழகே..,
அது அடங்கிட இனி நீயே போதும் - எப்போதும்...!

No comments:

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails