Thursday, November 12, 2009

முதல் வணக்கம்..! அனைவருக்கும்..!

டும் டும் டும் டும்.....

ஆபீஸ்ல புடுங்குறதுக்கு ஆணி இல்லன்னு சொல்லி ப்ளாக் ஆரம்பிச்சு கடப்பாறையையே புடுங்குற பதிவுலக அண்ணன்களே தம்பிகளே, அக்காக்களே தங்கச்சிகளே, பெருசுகளே சிருசுங்களே, நண்டுகளே சிண்டுகளே மற்றும் தல'களே தளபதி'களே....!

இதனால உங்களுக்கு தெரிவிக்கிறது என்னன்னா, இன்னைக்கு நாங்களும் புதுசா ஒரு கடப்பாற வாங்கிட்டோம். இனிமே கதை, கவிதை, விமர்சனம், வம்பு, வெட்டிபேச்சு, நக்கலு, நையாண்டின்னு கொழா தகராறுலேர்ந்து நிலா தராரு வரைக்கும் நாங்களும் பஞ்சாயத்து பண்ண போறோம். நீங்களும் அடிக்கடி வாய்தா வாங்காம வந்து சாட்சி சொல்லிபுட்டு போகணும்னு ரொம்ப தாழ்மையா கேட்டுகுரோமுங்கோவ்....!

டும் டும் டும் டும்.....
(ஒரு சோடா கெடைக்குமா..?)

டிஸ்கி : (இது இல்லன்னா யாரும் படிக்க மாட்டாங்களே..!)

உங்களுக்கு பதிவு புடிச்சிருந்தா வாழ்த்துங்க..!
இல்லனாலும் வாழ்த்துங்களேன், காசா பணமா, எல்லாம் ஒரு விளம்பரத்துக்கு தான்...!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அனைத்து பதிவர்களுக்கும், பதிவுலக நண்பர்களுக்கும் எங்களுடைய பணிவான வணக்கங்களோடு இப்பயணத்தை துவங்குகிறோம். பாதை இனிதே அமைந்திட இறைவன் மற்றும் உங்கள் துணையும் ஆதரவும் என்றும் கிடைத்திடும் என்கிற

நம்பிக்கையுடன்,

அறிவு GV.

No comments:

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails