Monday, November 16, 2009

இயலாமை















பின்னிரவில் பெய்ய ஆரம்பித்த மழை

சாலையோர குழந்தையின் உறக்கம் கலைக்க,
அருகிலுள்ள மரத்தடியை அணுகியது அது.
சற்று நேரத்திலெல்லாம் மழை வலுக்க
மரம் தளர்ந்து,
அதன் முகம் நனைக்க ஆரம்பித்தது.
வெளியே வந்து வேறு இடம் தேட,
இடப்பக்கம் தெரிந்தது மூடப்பட்ட ஒரு கடை .
அழகாய் தொங்கியபடி வண்ணமயமாய் குடைகள் உள்ளே,
தரை சேராத விழுதுகள் போல..!
வலப்பக்கமோ பூட்டப்பட்ட ஒரு கோயில்,
நான் தப்பித்தேன் எனும்படி உள்ளே கடவுள்..!
இயலாமல் இருப்பது
குடையோ கடவுளோ அல்ல,
தாம் தான் என்பதை உணராமல்
அவர்களது இயலாமையை எண்ணியபடி,
தன் பிஞ்சுக் கால்களால்
மீண்டும் அம்மரம் நோக்கி நடந்த
குழந்தையின் மனதில் ஒரேயொரு கேள்வி,
எப்போது விடியும்..?


சென்ற வாரம் நான் மழையில் நனைந்தபடி ஊருக்குச் செல்ல பேருந்துக்காக காத்திருந்தபோது தோன்றிய கவிதை(?!) இது. சக்கையா இருக்கா இல்ல மொக்கையா இருக்கான்னு சொல்லிட்டு போங்களேன்.

அறிவு GV .

3 comments:

Karthik Sabapathy said...

Hey thanks..I normally surf around and read other's blogs.. that's how I came across your poem..u see..

கமலேஷ் said...

very nice moments...

அறிவு GV said...

நன்றி கமலேஷ்.

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails