Thursday, December 24, 2009

காதல் இறந்த காலம்


ற்றவர் முன் சிரித்துவிட்டு
மழையினில்
நனைகையில் அழுதுகொண்டு..,

துவிலும் புகையிலும் மனத்தைவிட்டு
உன்
முகத்தினை நொடியினில் மறந்துவிட்டு..,

ன்
கூந்தல் கோதிய கரங்களால்
தாடியை மட்டும் தடவிக்கொண்டு..,

ன்
இதழ்கள் சுவைத்த இதழ்களால்
நித்தம் உன்னை இகழ்ந்துகொண்டு..,

ணைக்கையில்
நொறுங்கிய எலும்புகளின்
ரணத்தினை மார்பினில் சுமந்துகொண்டு..,

விதியோ விதியின் சதியோ
என
கவிதைகள் பல கிறுக்கிக்கொண்டு..,

காலனின் கரங்களில்
என்
காதலை தந்துவிட்டு..,

ருகும் மெழுகாய்
உதிரும் இலையாய்
கரையும் பனியாய்
கலையும் மேகமாய்..,

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..?
காதலி,
எனை நீ மறுத்ததும்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..?!



---------------------------------------------------------------
பி.கு : உரையாடல் கவிதைப் போட்டிக்காக இக்கவிதை..!
---------------------------------------------------------------



சரி சரி, வந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு 'ஒட்டு' போட்டுட்டு போயிடுங்க..!

11 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அறிவு

வெற்றிக்கு வாழ்த்துக்கள்...!

அறிவு GV said...

வருகை, வாழ்த்து, ஓட்டு, Follower - அனைத்திற்கும் நன்றி வசந்த்.

பாலா said...

அண்ணே.. நான் தான் முன்னாடியே சொல்லியிருந்தேனே..!! :) :) :)

இப்பிடி..எல்லாரும் அடிச்சித் தொரத்துறீங்களே!! :)

00

சரி.. சரி.. இனிமே.. கவித ஏரியாவுக்கு... வோட்டு மட்டும் போட்டுட்டு போய்டுறேன்.! :)

Unknown said...

நல்ல இருக்கு...
பாராட்டுக்கள்...

கா.பழனியப்பன் said...

// உருகும் மெழுகாய்
உதிரும் இலையாய்
கரையும் பனியாய்
கலையும் மேகமாய் //

அழகான உதாரணம் ரசித்தேன். வாழ்த்துக்கள்.

வெற்றி said...

நல்லா இருக்கு அறிவு..
அனுபவமோ?

தமிழ் said...

வாழ்த்துகள்

thiyaa said...

அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

அறிவு GV said...

@ பாலா : தல, எனக்கு கவிதைனா கொஞ்சம் பிடிக்கும். அதான். ஓட்டுக்கு நன்றி. என் கவிதைகள் ரொம்ப சிக்கலாவேல்லாம் இருக்காதே.. புரியலியா தல..?

@ பேநா : நன்றி பேனா. கதை, கவிதைன்னு நீங்களும் கலக்குறீங்க போங்க. :)

@ பழனி : நன்றி பழனி.

@ வெற்றி : நன்றி வெற்றி வருகைக்கும், follower க்கும் . எல்லாம் மாயை தான். :)

@ திகழ் : வருகைக்கும், follower க்கும் ரொம்ப நன்றி திகழ்.

@ தியா : நன்றி, நன்றி தியா. உண்மையா தான் சொல்றீங்களா..? :)

Thenammai Lakshmanan said...

மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்

Sakthi said...

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..?

nalla kelunga..!

Post a Comment

எண்ணங்களை எழுத்தாக்கினா ஒன்னும் தப்பில்லீங்ணா..!

Related Posts with Thumbnails